Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற பெரியாச்சி  அம்மன் கோவில்…. நடைபெற்ற திருவிழா…. ஏராளமான பக்தர்கள் தரிசனம்….!!

பெரியாச்சி  அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரியாச்சி  அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு தொடியேற்றத்துடன்  தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று வணிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்நிலையில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |