Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற சந்தன ராமர் கோவில்…. நடைபெற்ற வெண்ணெய்த்தாழி திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!!

சந்தன ராமர் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் பிரசித்தி பெற்ற சந்தனராமர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ராம நவமியை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று  வெண்ணெய்த்தாழி உற்சவம் நடைபெற்றது.

இந்நிலையில் சீதா, லட்சுமணன், அனுமன் சமேத சந்தனராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து வெண்ணெய்த்தாழி பல்லக்கில்  எழுந்தருளிய   சந்தனராமர் நகரின் முக்கிய வீதி வழியாக  கோவிலை வந்தடைந்தார். இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை  தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |