குருபகவான் கோவிலில் வியாழக்கிழமையை முன்னிட்டு குருவார பூஜைகள் நடைபெற்றுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் குரு வார வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று வியாழக்கிழமையை முன்னிட்டு குருவார வழிபாடு நடைபெற்றது.
இந்நிலையில் கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் ஆகியோருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து குருபகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குரு பகவானை தரிசனம் செய்துள்ளனர்.