Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற திருவிழா…. கலந்து கொண்ட பக்தர்கள்….!!!

சித்ரா பவுர்ணமியை  முன்னிட்டு முத்துமாரி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை  முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று 55-வது ஆண்டு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் 108 சிவன் கோவிலில்  இருந்து  பால்குடம், காவடி போன்றவற்றை எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

அதன் பின்னர் முத்துமாரி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த திருவிழாவில் அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |