Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற பூச்சொரிதல் திருவிழா…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிம்ம வாகன அலங்காரத்தில்  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து   விரதம் இருந்து   வந்த ஏராளமான பக்தர்கள் பூச்சொரிதல் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Categories

Tech |