பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியத்தில் பிரசித்தி பெற்ற உடல் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தேர்த்திருவிழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு அம்மனை சிறப்பாக அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டினர். இதனையடுத்து ஆரியமாலா மற்றும் காத்தவராயன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதன்பிறகு தேர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்துள்ளனர்