Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்திபெற்ற முத்தாலம்மன் கோவில்….. மாறுவேடம் அணிந்து வரும் பக்தர்கள்…!!!

முத்தாலம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் மந்தை பகுதியில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் மாறுவேடம் அணிந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அதன்பின்னர் அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த திருவிழாவில்  நூற்றுக்கணக்கான பக்தர்கள்  கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |