Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பிரசவ வலியால் துடித்த ஆதரவற்ற கர்ப்பிணி பெண்…… பிரசவம் பார்த்த பெண் போலீஸ்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

ஆதரவட்ட பெண்ணிற்கு பிரசவம் பார்த்த பெண் காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணியாற்றுபவர் இளவரசி. இவர் இன்று அதிகாலை 2 மணிக்கு பணிக்கு வந்த அவர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு வெளியில் வந்துள்ளார் .அப்போது போலீஸ் நிலையம் எதிரே ஜவுளிக்கடை அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழுது கொண்டிருந்தார். அழுகை சத்தம் கேட்டு அங்கு சென்ற இளவரசி அவர் பிரசவ வலியால் அழுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இளம் பெண்ணுடன் ஆறு வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை ஒன்று இருந்தது. உடனே காவல் நிலையத்திற்கு வந்த இளவரசி அங்கிருந்து இன்ஸ்பெக்டர் பத்மநாதன். போலீஸ் சாந்தி ஆகியோரை அழைத்துக் கொண்டு சென்று பிரசவ வழியால் துடித்து கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார்.

பிரசவத்தில் அவருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இதையடுத்து இளம் பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையும் தாயும் தற்போது நலமாக உள்ளன. இது தொடர்பாக இளம் பெண் தெரிவித்ததாவது திருமணமான சில மாதங்களில் கணவர் தன்னை விட்டு விட்டு சென்றதாகவும், தனது அண்ணன் பிச்சை எடுத்து பணம் தர வேண்டும் என்று வற்புறுத்துவதாக கூறினார். இதனால் பிச்சை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். பெண் போலீஸ் இளவரசி குழந்தைக்கு தேவையான உடைகள் உள்ளிட்ட பல பொருட்களை வாங்கி கொடுத்தார். ஆதரவற்ற பெண்ணிற்கு பிரசவம் பார்த்த சம்பவம் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |