பிபின் ராவத் உருவப்படத்திற்கு பள்ளி குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
மதுரை உசிலம்பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளியில் மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவப் படத்தை வைத்து, அந்த உருவப்படத்திற்கு முன்பாக பள்ளி குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அதேபோல் வண்டி பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியிலும் அவரது உருவப்படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி 05 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.