Categories
தேனி மாவட்ட செய்திகள்

பின்னாடி தான் நிறுத்திருந்தேன்… மர்ம நபரின் கைவரிசை… வலைவீசி தேடி வரும் போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் வீட்டிற்கு பின்னால் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசாமி அவருடைய இருசக்கர வாகனத்தை கடந்த 7ஆம் தேதி இவருடைய வீட்டிற்கு பின்னால் நிறுத்தி வைத்திருந்துள்ளார். இதனையடுத்து அதற்கு மறுநாள் பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போயிருந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த ராமசாமி உடனடியாக ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருடிய மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |