நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன.
அதன்படி அகத்திக் கீரையில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை வாரம் ஒருமுறை சமைத்து சாப்பிட்டால் வெயிலில் அலைவதால் ஏற்படும் உடல் வெப்பம், மலச்சிக்கல் ஆகியவை குணமாகும். காபி, டீ குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவையும் விலகும். அகத்திக்கீரையை தேங்காய் பால் சேர்த்து அரைத்து, தேய்த்துக் குளித்தால் கண்களுக்கு கீழே காணப்படும் கரு வளையம் மறையும்.