Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பிணவறையில் சடலம்” கடித்து குதறிய எலிகள்…. கொந்தளித்த உறவினர்கள்…..!!

அரசு மருத்துவமனையில் பிணவறையில் இருந்த உடல்களை எலிகள் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவில் அருகே ஆவியூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஆறுமுகம். 40 வயதான இவர் கொத்தனார் வேலை செய்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருக்கோவிலூர் கிழக்கு வீதியில் உள்ள ஒரு கட்டிட மாடியில் அமைந்த சாரத்தை சக ஊழியர்களுடன் அகற்றிக் கொண்டிருந்த போது  முருகன் என்பவர் சாரத்தில் இருந்த கம்பு ஒன்றை எடுக்கும்போது அந்த வழியாக சென்ற மின்கம்பியில் பட்டதால் மின்சாரம் தாக்கி முருகன் , ஆறுமுகம் இருவரும் மாடியில் இருந்து விழுந்தனர். அதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

முருகன் படுகாயம் அடைந்தார் அவரை திருக்கோவிலூர்  திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றார். இதில் பலியான ஆறுமுகத்தின் உடலை திருக்கோவிலூர் காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு உடலை பிணவறையில் வைக்கப்பட்டு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து உடலை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார் அப்பொழுது  உடலில் மூக்கு மற்றும் கால் பகுதிகளை எலிகள் கடித்து குதறி இருப்பதை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பார்த்தனர்.

இது குறித்து காவல்துறையிடம் கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இறந்தவர்களின் உடலை பாதுகாக்க வேண்டியது மருத்துவமனை நிர்வாகத்தின் பொறுப்பு . இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறி அவர்களை சமாதானம் செய்தனர். இதைத் தொடர்ந்து ஆறுமுகத்தின் உடலை அவரது குடும்பத்தினர் மருத்துவமனையிலிருந்து எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலை எலிகள் கடித்து குதறிய சம்பவம் குறித்து திருக்கோவிலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |