Categories
உலக செய்திகள்

பிணவறையில் அசைந்த முதியவர் உடல்…. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!!

சீன நாட்டின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன. அங்கு வைரஸ் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் ஷாங்காய் நகரின் புட்டுவோ மாவட்டத்திலுள்ள முதியோர்இல்லத்தில் ஒரு முதியவர் உயிரிழந்து விட்டதாக சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி அங்கு சென்ற அதிகாரிகள் முதியவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தாமல் அவரது உடலில் துணியைசுற்றி பிணவறைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது அங்கு பணியிலிருந்த ஊழியர்கள் முதியவரின் உடலில் சுற்றி இருந்த துணியை விலக்க முயற்சி செய்தபோது, அவர் உடல் அசைந்துள்ளது. இதன் காரணமாக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் அவர்கள் முதியவரை பரிசோதித்ததில் அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது அவர் நலமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இச்சம்பவம் குறித்து வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆகவே இச்சம்பவத்தில் தொடர்புடைய சுகாதார அதிகாரிகள் 4 பேரை ஷாங்காய் நிர்வாகமானது பணியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

Categories

Tech |