தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் அருகே திருநந்திக்கரை இடவக்கோடு பகுதியில் தேவதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருக்கிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் தேவதாசும் சரஸ்வதிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேவதாஸ் விஷம் குடித்து விட்டு படுக்கையில் பிணமாக கிடந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சரஸ்வதி குலசேகரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தேவதாஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.