Categories
உலக செய்திகள்

பிச்சை தான் எடுத்தாரு….. வங்கி கணக்கில் ரூ.14 கோடி….. இலங்கையில் நடந்த வினோதம் …!!

இலங்கையில் பிச்சை எடுப்பவரின் வங்கிக்கணக்கில் 14 கோடி ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டு அதுபற்றிய தகவல் வெளிவந்துள்ளது

இலங்கை கொழும்பு புறநகர்ப் பகுதியில் பிச்சை எடுப்பவர் ஒருவரது வங்கி கணக்கில் 14 கோடி ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் நடத்திய விசாரணையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. போதைப் பொருள் விற்பனை செய்யும் மர்வின் ஜானா என்பவருக்கு உரிய பணமே அந்த பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில் போடப்பட்டு உள்ளது.

பிட்சைகாரரின் பெயரில் அத்திடிய தனியார் வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு போதைப்பொருள் விற்பனையாளர் ஜானாவின் பணம் போடப்பட்டுள்ளது அந்த வங்கி கணக்கு புத்தகம் மற்றும் வங்கி அட்டை ஜானாவின் மனைவியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. பிச்சைக்காரரின் பெயரில் தொடங்கப்பட்ட அந்த வங்கி கணக்கில் கடந்த 11 மாதங்களில் 14 கோடி ரூபாய் போடப்பட்டுள்ளது. மர்வின் ஜானா தற்போது விசாரணையில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |