காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ராஜஸ்தானில் ஜாலவார் நகரம் வழியே இன்று காலை தன் பாத யாத்திரையை துவங்கினார். அப்போது அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்த்சிங் தோதாஸ்ரா, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், பல அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ராகுல்காந்தியுடன் சென்றனர்.
जुड़ रहा है भारत, मिल रहे है दिल…
BJP वालों ने अपने कार्यालय की छतों पर खड़े होकर @RahulGandhi जी का घण्टों इंतजार किया,
राहुल गांधी जी ने प्यार के साथ उनका अभिवादन किया, उन्हें प्यार का पैगाम दिया ❤️#BharatJodoYatra 🇮🇳 pic.twitter.com/MP4kEbhbad
— Indian Youth Congress (@IYC) December 6, 2022
இந்நிலையில் ராகுல்காந்தி பாத யாத்திரையை பார்க்க ஜாலவார் நகர பா.ஜ.க அலுவலகத்தின் மாடியில் பெரும்பாலான மக்கள் கூடி இருந்தனர். அப்போது அங்கு கூடி இருந்த மக்களை பார்த்து ராகுல்காந்தி கையசைத்து ப்ளையிங் கிஸ் கொடுத்து வியப்பில் ஆழ்த்தினார். பா.ஜ.க அலுவலகத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் பதாகைகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றின் பின்னால் நின்ற மக்களை நோக்கி ராகுல்காந்தி ஆரவாரம் செய்த காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.