தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் அவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கொரோனா தடுப்பூசி பாலூட்டும் தாய்மைர்களுக்கு போடலாமா? என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில் பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று தமிழக அரசின் பொதுசுகாதார முன்னாள் இயக்குனர் டாக்டர் குழந்தை சாமி தெரிவித்துள்ளார்.