Categories
தேசிய செய்திகள்

பாலியல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் கொடுத்த கோர்ட்டு…. எதற்காக தெரியுமா?….!!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த எழுத்தாளர் சிவிக்சந்திரன் (74) மாற்றுத்திறனாளி ஆவார். இதற்கிடையில் சிவிக்சந்திரன் தன்னை கோழிக்கோடு மாவட்டம் கொயிலனி கடற்கரையில் வைத்து சென்ற 2020 பிப்ரவரியில் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் எழுத்தாளர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து இவ்வழக்கில் தனக்கு முன் ஜாமின் கோரி சிவிக்சந்திரன் கோழிக்கோடு மாவட்ட கீழமை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவுடன் புகார் அளித்த பெண் தன் மடி மீது அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் சிவிக்சந்திரன் இணைத்து கொடுத்துள்ளார்.

அதன்பின் இந்த வழக்கில் சிவிக்சந்திரனுக்கு நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியது. அதன்படி முன்ஜாமின் வழங்கியதற்கான உத்தரவு நகல் இன்று வெளியாகியது. அவற்றில், முன்ஜாமின் கோரி மனுதாரர் தாக்கல் செய்யப்பட்ட மனுவும், இணைக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கும்போது, அந்த பெண் தனது உடல் அங்கங்கள் தெரியும்படி ஆடை அணிந்துள்ளார். அந்த ஆடை பாலியல் ரீதியில் தூண்டும் விதமாக இருக்கிறது.

உடல் ரீதியிலான தொடர்பு (Physical Contact) இருந்தது ஒப்புக்கொண்டபோதும் 74 வயதான மாற்றுதிறனாளி நபர், புகாரளித்த பெண்ணை தன் மடியில் வலுக்கட்டாயமாக அமரவைத்து பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கூறுவதை நம்பமுடியவில்லை. எனவே சட்டப்பிரிவு 354 ஏ குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பொருந்தாது என கருதப்படுகிறது. இதன் வாயிலாக மனுதாரருக்கு முன்ஜாமின் வழங்கப்படுகிறது என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இத்தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.

Categories

Tech |