அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்து பிரபல நடிகை ஆண்ட்ரியா கருத்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இதற்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து பல கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,
நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பொறுப்பேற்கும் நிலை ஏற்பட்டால் தவிர பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒழியப் போவதில்லை” ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது அவளுடைய தவறு அல்ல. இந்தியாவின் தாய்களே உங்கள் மகன்களை நெறிப்படுத்துங்கள் அவர்களுக்கு பெண்களை மதிக்க கற்றுக் கொடுங்கள் என பதிவிட்டுள்ளார்.