சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் வகுப்பில் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை தருவதாக எழுந்த புகாரின் பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமன்றி ஆசிரியருக்கு ஜூன் 8-ஆம் தேதி வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாலியல் குற்றப்பிரிவில் சிக்கியுள்ள பிஎஸ்பிபி பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். பல ஆண்டுகளாக இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவதாக குற்றவாளிகள் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் போது, இந்த தவறுகளை அலட்சியம் செய்த பள்ளி தலைமை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.