பாலா முத்து மலர் விவாகரத்துக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்ட போது பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி வைத்துள்ளார் சிவக்குமார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வரும் பாலா 2004 ஆம் ஆண்டு கோடீஸ்வரரின் மகளான முத்து மலரை பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் இவர்கள் குடும்ப நல நீதிமன்றத்தின் மூலம் சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றுள்ளனர்.
விவாகரத்துக்கு முன்னதாக நடிகரும் சூர்யாவின் தந்தையுமான சிவகுமார் இவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டபோது பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி வைத்திருக்கின்றார். ஆனால் இவர்கள் இருவரும் பிரிந்தே ஆகவேண்டும் என்று விவாகரத்து செய்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.