Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தரைப்பாலம் உடைந்தது”… 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு….!!!!!

பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆம்பூர் தரைப்பாலம் உடைந்து 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

சென்ற வருட வடகிழக்கு பருவமழையின் போது மாதனூர் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காவிரி கூட்டு குடிநீர் பைப் லைன் சேதமடைந்தது. மேலும் பாலாற்றில் தரைப்பாலம் இரண்டு துண்டாக உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு நிலையில் தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்து வருவதால் கோட்டாறு ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் தற்காலிகமாக பயன்படுத்தப்பட்டு வந்த தரைப் பாலமும் இரண்டாக உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இதனால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்குச் செல்ல பள்ளிகொண்ட அல்லது பேரணம்பட்டு சாலை வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பத்தூர் ஆட்சியர் சம்பவ இடத்திற்கு அதிகாரிகளுடன் வந்து ஆய்வு செய்தார்.

 

Categories

Tech |