தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா 3 தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரையிலும் ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு இளையராஜா தன் சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில் ”எல்லா வருடங்களும் எனக்கு இந்நாளில் பாரதியாரின் நினைவு வரும். அது என்னை வருத்தும்.
என்னை பாரதியாரோடு ஒப்பிட்டுபார்த்து நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? என அவன் தன்னை தானே நொந்து கொண்டானில்லையா?. நல்லதோர் வீணை செய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?. தன்னை நல்லதோரு வீணையாகவும், அவனை உருவாக்கிய அம்மையே சக்தியே என்னை நலங்கெடபுழுதியில் ஏறிந்துவிடுவாயோ என அவனின் நொந்தல் என்னை வருத்தும். அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் என் பட பாடலில் நான் பதில் கூறியிருக்கிறேன். உன் குத்தமா என் குத்தமா பாடலில் வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசையுண்டு என பாரதிக்கு நான் ஆறுதல் கூறியிருக்கிறேன்.
பாரதி கலங்குவதை என்னால் தாங்கமுடியவில்லை. இன்று நதிகள் இணைப்பு திட்டத்தைப் குறித்து நாமெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவன் சிறு வயதில் நதிகள் இணைப்பு திட்டத்தை அப்போதே கற்பனை செய்திருக்கிறான். அவனை நினைத்து நாம் மரியாதையும், வணக்கமும், அஞ்சலியும் செலுத்துவது மாபெரும் ஒப்பற்ற விஷயம் ஆகும். பாரதியாரின் நினைவுநாளை நினைவில் கொண்டு தமிழக அரசு இந்நாளை அவரின் பெயரால் அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. தமிழ்நாடு அரசு வாழ்க! முதல்வர் ஸ்டாலின் வாழ்க” என்று தெரிவித்துள்ளார்.
மகாகவி பாரதியின் நினைவு நாளில், வாழ்க பாரதியின் புகழ். pic.twitter.com/pOOwpCOo43
— Ilaiyaraaja (@ilaiyaraaja) September 11, 2022