திருப்பூர் அருகே நெல் ஊறவைக்கும் பாய்லரில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
தாராபுரத்தில் இயங்கிவரும் தனியார் அரிசி மில்லில் திருவாரூரைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இன்று வழக்கம்போல் தனது பணியைத் தொடங்கிய அவர் நெல் ஊறவைக்கும் பாய்லரில் தண்ணீரை நிரப்பி நெல் மூட்டைகளை கொட்டிய போது பாய்லரில் அவர் தவறி விழுந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அளித்த புகாரின்பேரில் வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாய்லரில் சிக்கியிருந்த ஜீவானந்தத்தை மீட்டனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். இதனிடையே ஜீவானந்தம் பாய்லருக்குள் தவறி விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.