Categories
தேசிய செய்திகள்

பாம்பிடம் கடி வாங்கி…. தனது எஜமானை காப்பாற்றிய நாய்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!!

வீட்டிற்குள் புகுந்த பாம்பை நாய் கொன்று உரிமையாளர்களை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் மூலக்குளம் அருகே ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் ரமணி. இவருடைய மனைவி சித்ரா. இவர்கள் தங்களது வீட்டில் வெளிநாட்டு நாய்களான லெனி, மிஸ்டர் என்று பெயரிடப்பட்ட  2  நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்த இரு நாய்களையும் இரவு நேரத்தில் கட்டி போடாமல் அப்படியே விட்டு விடுவதனால் இரவு முழுவதும் வீட்டை சுற்றி கண்காணித்து வந்துள்ளது.

இந்தநிலையில் மிஸ்டர் என்ற நாய்க்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவரிடம் அழைத்து சென்றும் சோர்வுடனே இருந்த நாயைப் பார்த்து தம்பதிகள் ஏன் இவ்வாறு இருக்கிறது என்று தெரியாமல்  மன வருத்தத்துடன் குழப்பத்தில் இருந்தனர். அப்போது அவருடைய மனைவி சித்ரா வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற போது, கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று செத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சிக்கு உள்ளானார்.

இதன் பின்பு தான் வீட்டிற்குள் புகுந்த பாம்பை நாய் கடித்து கொன்றதால் நாய்க்கு விஷமேறி உடல் நலக்குறைவு ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து மீண்டும் நாயை மருத்துவரிடம் கூட்டிச் சென்று தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். பாம்பிடம் கடி வாங்கி உரிமையாளரை காப்பாற்றிய  சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |