Categories
அரசியல் மாநில செய்திகள்

பாமக போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன?… சற்று நேரத்தில் அறிவிப்பு…!!!

அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் என்ன என்பது பற்றி அறிவிப்பு சற்று நேரத்தில் வெளியாக உள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.

அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் என்ன என்பது பற்றி சற்று நேரத்தில் அறிவிப்பு வெளியாக உள்ளது. அதன்படி கும்மிடிப்பூண்டி, திருத்தணி, திருப்போரூர், செங்கல்பட்டு, விக்கிரவாண்டி, சங்கராபுரம், ஆரணி, பெண்ணாகரம், காட்டுமன்னார்கோவில், வீரபாண்டியில் போட்டியிட வேண்டும் என்று பாமக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |