பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கு இன்று மாலை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு இன்று மாலை தொற்று உறுதியாகியுள்ளது. இவர் தனது தைலாபுரம் தோட்ட இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இது தொடர்பாக தனது twitter பகுதியில் அவர் தெரிவித்ததாவது: “நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டு இருந்த எனக்கு இன்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தைலாபுரம் தோட்ட இல்லத்தின் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தொற்று பரவல் வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றை பின்பற்ற வேண்டும். கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். தொற்று பரவலால் ராமதாஸ் பாதிக்கப்பட்டுள்ளதால் பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் பயிலரங்கில் நடத்தப்பட்டு வந்த ஆய்வுக் கூட்டங்களும், பயிற்சி வகுப்புகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.