ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளியில் குடிநீர் பானையை தொட்ட பட்டியலினம் சமூகத்தை சேர்ந்த மாணவனை ஆசிரியர் தாக்கிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒன்பது வயது மாணவன் இந்திர மேக்வல் வகுப்பறையில் இருந்த குடிநீர் பானையை தொட்டு குடிக்க தண்ணீர் எடுத்துள்ளார். இதனைப் பார்த்த ஆசிரியர் ஷாயில் சிங் மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார்.
ஆசிரியர் தாக்குதலில் முகம், காது, கண் பகுதியில் பலத்த காயமடைந்த மாணவன் மேக்வல் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இதில் பலத்த காயம் அடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தான். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உயிரிழந்த மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.