தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் நலனை கருத்திக்கொண்டும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு மாநில அரசுகள் சலுகைகளை அறிவித்து வந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கொரோனா நோய் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரண தொகையாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது உறவினர் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.