விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து விட்ட நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்கியுள்ளது. 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக ஜி பி முத்து இருக்கிறார். தூத்துக்குடி தமிழில் இவர் பேசும் டயலாக்குகள் பல மீம் மெட்டீரியலாகவும் மாறியுள்ளன.
மேலும் போட்டியாளர்களுக்கு இடையே தற்போது சிறிய சிறிய சண்டைகள் ஏற்பட்டு பிக்பாஸ் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பொதுவாக சனி, ஞாயிறுக்கிழமைகளில் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிலையில் இதை பார்ப்பதற்கு ரசிகர் பட்டாளம் அதிகமாக இருக்கின்றனர். இந்நிலையில் இன்று வந்த கமலஹாசன் ஜிபி முத்துவை கலாய்த்துள்ளார். அதாவது பாதாம் தெரியும்… ஆதாம் தெரியாதா? என்று கோபமாக கேட்டதற்கு ஜி பி முத்து ஆதாம்னா யாரு என்று மீண்டும் கமலை திக்கு முக்காட வைத்துள்ளார்.