பிரதமர் இம்ரான் கான் அப்துல் காயிம் நியாசி என்பவரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முதல் மந்திரியாக நியமித்துள்ளார்.
பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அண்மையில் நடந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களைக் கொண்ட சட்டசபை தேர்தலில் 32 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் முதன்முதலாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி ஆட்சி அமைக்கிறது. ஆனால் பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை மூடி மறைக்கும் முயற்சி தான் இந்த தேர்தல் என்று இந்தியா கூறி வருகிறது.
இந்நிலையில் பிரதமர் இம்ரான் கான் அப்துல் காயிம் நியாசி என்பவரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முதல் மந்திரியாக நியமித்துள்ளார். இதற்கிடையே பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி இம்ரான் கான் அப்துல் காயிம் நியாசியை புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகே தேர்வு செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளது. மேலும் புதிய அரசு அப்துல் காயிம் நியாசி தலைமையில் விரைவில் பதவி ஏற்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.