பாகிஸ்தான் அரசு பஞ்சாப் மாகாண ஆளுநரை காரணம் கூறாமல் திடீரென பதவியிலிருந்து நீக்கி இருக்கிறது.
இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் வாக்கெடுப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஞ்சாப் ஆளுநர் பதவி நீக்கம் குறித்த தகவல் அறிவித்த செய்தி துறை அமைச்சர் பாவத் சவுத்ரி எதற்காக பதவி நீக்கம் என்பது குறித்து தகவலையும் வெளியிடவில்லை. மேலும் புதிய ஆளுநர் யார் என பின் அறிவிக்கப்படும், என்றும் அதுவரை பஞ்சாப் சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் பொறுப்பு ஆளுநராக செயல்படுவார் எனவும் பாவத் சவுத்ரி கூறியுள்ளார்.