பாகிஸ்தானின் 28-வது தலைமை நீதிபதியாக உமர் அதா பண்டியல் பதவி ஏற்றார்.
பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்தவர் குல்சார் அகமது. இவரது பதவி காலம் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி உமர் அதா பண்டியல் என்பவர் பாகிஸ்தானின் 28வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முன்னிலை வகித்தார்.அதன்பின் அந்நாட்டின் அதிபர் டாக்டர் ஆரிப் அல்வி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இந்த விழாவில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ராணுவ உயர் அதிகாரிகள், மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.