கோவை பில்லூர் அணையின் நீர்மட்டமானது 97 அடியை எட்டியது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி அணையின் 4 மதகுகள் திறக்கப்பட்டு மதகுகள் வழியே நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானிஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் நீலகிரியில் பெய்யும் மழையை பொறுத்து பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.
நேற்று காலை 8 மணிக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீரானது வந்தது. இதனிடையில் அணையின் நீர்மட்டத்தை சீராக வைத்து இருப்பதற்காக அணையிலிருந்து வினாடிக்கு 17,060 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக 5வது நாளாக பவானிஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பாக தொடர்ந்து வெள்ளஅபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.