Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பழுதடைந்த மின்கம்பங்கள்…. மின்கசிவால் பேராபத்து ஏற்படும் அபாயம்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!!

மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் என்பது பொதுமக்களின் இன்றியமையாத தேவையாக மாறிவிட்டது. இந்த மின்சாரத்தால் ஆபத்து நேர்ந்தாலும், மக்களின் தினசரி தேவையாகவே மின்சாரம் மாறிவிட்டது. குறிப்பாக மழைக்காலங்கள் மற்றும் பலத்த காற்று வீசும் சமயங்களில் பொதுமக்கள் மின்சாரத்தை மிகவும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பங்கள் மூலமாக கூட சில சமயங்களில் ஆபத்து ஏற்படுகிறது.

அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் முத்தம்பட்டி கிராமத்தில் உள்ள பல்வேறு மின் கம்பங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் பழுதடைந்துள்ளது. இதில் ஒரு மின்கம்பத்தில் இருந்து தற்போது மின் கசிவு ஏற்படுவதால் எந்த நேரமும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். மேலும் விபத்து ஏற்படுவதற்கும் முன்பாக மின்கம்பங்களை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |