Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனிக்கு வந்த புஷ்பா பட வில்லன்…. செல்பி எடுத்து மகிழ்ந்த பக்தர்கள்…. நிருபர்களுக்கு அளித்த பேட்டி…!!

நடிகர் பழனி முருகன் கோவிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனிக்கு புஷ்பா படத்தில் வில்லனாக நடித்த சுனில் சென்றுள்ளார். அவர் ரோப்கார் மூலம் மலை கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டுள்ளார். இதனை அடுத்து ரோப்கார் மூலம் சுனில் அடிவார பகுதிக்கு வந்துள்ளார். அவருடன் பக்தர்கள் செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து நம்ம பழனி என்ற செல்பி ஸ்பாட்டில் நின்று சுனில் புகைப்படம் எடுத்துள்ளார்.

இதனை அடுத்து நிருபர்களிடம் சுனில் கூறியதாவது, இயக்குனர் சுசீந்திரன் “வள்ளிமயில்” என்ற திரைப்படத்தை இயக்குகிறார். அந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் தயாராகி வருகிறது. விஜய் ஆண்டனி, சத்யராஜ் நான் உட்பட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பழனி, திண்டுக்கல் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதனால் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்தேன் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |