பழநி முருகன் கோவிலில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாமி தரிசனம் செய்தார்.
பழநி முருகன் கோவிலுக்கு தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். மலை அடிவாரத்திலிருந்து ரோப் கார் மூலமாக மலை மீது கோவில் ஊழியர்கள் அழைத்துச் சென்றனர். பின்னர் மலைக் கோவிலில் நடைபெறும் ராக்கால பூஜையில் கலந்துகொண்டு புஷ்ப அலங்காரத்தில் இருந்த முருகனை தரிசனம் செய்தார். பழநி கோவிலுக்கு வருகை தந்த நிதிஅமைச்சர் பழனிவேல்தியாகராஜனுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.