Categories
மாநில செய்திகள்

பழங்குடியினர் உதவித்தொகை உயர்வு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து வருகிறார். மேலும் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் பழங்குடியினர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இயற்கை மரணம் உதவித் தொகை 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்படுவதாகவும், ஈமச்சடங்கு உதவித்தொகை 2,000 ரூபாயிலிருந்து 5 ஆயிரமாக உயர்த்தபடுவதாகவும் தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |