புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கம்பர் குளத்தில் கழிவுநீர் கலக்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டில் பழங்கால குளம் ஒன்று உள்ள நிலையில் அந்த குளத்தில் உள்ள நீரை தான் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தார்களாம். இந்நிலையில் குளத்தின் அருகே உள்ள இடங்களை தற்போது ஆக்கிரமித்து வருகின்றன. மற்றொருபுறம் அங்கு வாழும் மக்கள் பயன்படுத்தி வெளியிடும் சாக்கடை கழிவுநீர் செல்ல கால்வாய் வழித்தடம் இல்லாத காரணத்தினால் கழிவு நீரானது குளத்தில் கலக்கின்றது.
இப்படி கழிவு நீர் கலப்பதால் குடிநீருக்கு பயன்படுத்தப்பட்ட இந்த குளமானது தற்போது பயனற்ற மாசு நிறைந்த காலமாகவும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனால் இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி கழிவுநீர் செல்ல மாற்று பாதை அமைத்து போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.