Categories
உலக செய்திகள்

பழக்கடையின் மீது மோதிய லாரி…. கோர விபத்து…. 8 பேர் பலி…. பெரும் சோகம்…!!!!!!!!

பிலிப்பைன்ஸில்  சாலையோரம் இருந்த பழக்கடையின் மீது லாரி மோதி விபத்திற்கு உள்ளானதில்  8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள படங்காஸ்  நசுகுபு நகரில் சென்று கொண்டிருந்த குப்பை லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது அந்த லாரி சாலையோரம் இருந்த பழக்கடையின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. அதன் பின் நிற்காமல் ஓடிய லாரி எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு அதன் பின் ஒரு காரின் மீது மோதி சென்று நின்றுள்ளது. இந்த விபத்தில் பழ  வியாபாரி, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் மற்றும் காரில் இருந்த 6 பேர் என மொத்தம் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |