திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் சாந்தி பிரியா என்பவர் கணித பாட முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர் மீது மாணவிகள் தொடர்ச்சியாக பல்வேறு புகார்களை எழுப்பி வருகின்றார்கள். அதாவது மாணவி ஒருவரிடம் தீண்டாமை உணர்வுடன் நடந்து கொண்டதாகவும் வேதியல் ஆய்வகத்தில் அமிலக் குடுவைகளின் அருகில் தனியாக அமர வைத்ததாகவும், பள்ளிகளில் பாடம் நடத்தாமல் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. மேலும் மற்றொரு மாணவியை மருமகளே என அழைத்து தன் மகனிடம் பேச சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் மாணவிகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பாட விஷயமாக பேச வேண்டும் என கூறி பாடம் தவிர்த்து மற்ற விஷயங்களை பேசி உள்ளார்.
இதனால் அழைப்பை ஏற்க மறுக்கும் மாணவிகள் மீது தேர்வு மதிப்பெண்களில் கை வைத்து விடுவேன் என கூறி மிரட்டி உள்ளார். மேலும் மற்ற ஆசிரியர்கள் உடன் சண்டையிட்டு விட்டு வகுப்பறைக்குள் வந்து பழிக்கு பழி என கரும்பலகையில் எழுதி மாணவர்களின் மனதில் நஞ்சை விதைத்திருக்கின்றார். இதனை தொடர்ந்து மேலும் ஒரு மாணவியிடம் தூங்கும் போது அந்த ஆசிரியை கணவரை நினைத்துக் கொண்டுதான் தூங்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் பள்ளியின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் பள்ளியில் அசாதாரண சூழல் ஏற்படும் என பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து வட்டார கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கு வந்த மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை மேற்கொண்டுள்ளார் அப்போது விசாரணையின் முடிவில் புகார் உண்மை என தெரியவந்தது.
இதனை அடுத்து ஆசிரியர் சந்தியா பிரியா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக பூலாங்கிணறு அரசு பள்ளி மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டிய ஆசிரியர் மீது அடுக்கடுக்காக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் பெற்றோரை வேதனையடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில் இது பற்றி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேசிய போது, ஆசிரியை சந்தியா பிரியா மீது ஏற்கனவே புகார்கள் இருக்கிறது ஒரு மாணவியை மருமகளே என அழைத்ததுடன் தன் மகனிடம் செல்போனில் பேச கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் அந்த மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் அந்த மாணவியிடம் பேசிய ஆடியோ ரெக்கார்டு வைத்து இதனை உறுதி செய்துள்ளோம். இந்த நிலையில் தன்னை ஜாதி ரீதியாக சக ஆசைகள் தீண்டாமையை பின்பற்றுவதாக சந்தியா பிரியா போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதனால் அவரை பணி நீக்கம் செய்யாமல் வேறு ஒரு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்திருக்கின்றோம் விசாரணை அனைத்து முடிவுற்ற பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.