Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவிக்கு கொரோனா…. பள்ளி மூடல் – பெரும் அதிர்ச்சி…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்ததால் செப்-1 முதல் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே மாணிக்கம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சக மாணவிகள் ஆசிரியர்கள் பீதியடைந்துள்ளனர்.

தொற்று உறுதியானதையடுத்து மாணவி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அந்த பள்ளியில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மூடப்பட்டு பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |