தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. ஆனால் பள்ளிகள் திறந்து 15 நாட்களில் 84 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குன்னூரில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் 5 மாணவிகளுக்கும், மற்றொரு பெண்கள் பள்ளியில் 3 மாணவிகளுக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக அந்த இரண்டு பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளது. அந்த இரண்டு பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.