Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா பயணம்…. இதை மட்டும் செய்தால் போதும்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!

தமிழக கல்வித்துறை சார்பில் பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் தொடக்க விழா திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி மாணவர்களுக்கான நூலக செயலினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு பள்ளி மாணவர்கள் வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான விழிப்புணர்வு கையேடு வெளியீட்டு விழாவில் சிறப்புறாற்றினார். அப்போது பேசிய அவர், இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர்கள் 6-8, 9-10, 11-12 என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் நூலகத்தில் உள்ள நூல்களில் இருந்து வாரம் ஒன்று வழங்கப்படும். அவர்கள் அதை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகலாம். அதை வாசித்து முடித்தவுடன் நூலகத்தில் திருப்பி தந்து விட்டு அடுத்த நூலை எடுத்துக் கொள்ளலாம். இதனையடுத்து படித்த நூல் குறித்து விமர்சனம், ஓவியம், நாடகம் நடத்தலாம், கலந்துரையாடல் செய்யலாம், நூல் அறிமுகம், புத்தக ஒப்பீடு மேற்கோள்கள் குறிப்பிடுதல், கதாபாத்திரங்களை மதிப்பீடு செய்தல், புத்தகம் தன் கதை கூறுதல் மற்றும் குறு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் என்று மாணவர்களின் இது போன்ற படைப்புகளில் பள்ளிகள் சேகரித்து வைக்கப்படும.

இவற்றில் சிறந்த மாணவர்கள் படைப்புகளை தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கெடுக்க வைக்கப்படுவர். அதில் வெற்றி பெருபவர்கள் மாவட்ட போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் நடத்தப்படும் முகாமில் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கெடுக்கலாம். அதனை தொடர்ந்து நடக்கவிருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கு 3 பேர் என்கின்ற வகையில் 114 பேர் சென்னை நூற்றாண்டு நூலகத்தில் முகவரி பங்கேற்பார்கள். இந்த முகாமில் தலை சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர்களைக் கொண்டு அமர்வுகள் ஏற்பாடு செய்யப்படும். இந்த நாட்களில் குழந்தை எழுத்தாளர்களுடன் மாணவர்கள் உரையாடும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும். மேலும் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளும் அவர்களின் புத்தக அனுபவ பகிர்வுகளும் நடைபெற இருக்கின்றன. இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இடையில் நடக்கும் இப்போட்டியில் வெல்வோர் ‘அறிவு பயணம்’ என்கின்ற பெயரில் வெளிநாட்டு சுற்றுலா பயணம் வாய்ப்பளிக்கப்படும். இந்த பயணத்தில் உலகப் புகழ்பெற்ற நூலகங்கள், ஆவண காப்பகங்கள் போன்றவற்றை காணலாம். மேலும் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள நூலக செயலி இந்தத் திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்கள் உலக அறிவே பெறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், இணை இயக்குனர் அமுதவள்ளி, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, துணை மேயர் திவ்யா, மண்டல தலைவர் மதிவாணன் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |