Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு இன்றும் நாளையும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது மிகுந்த கட்டுப்பாடுகளுடன் மக்கள் அனைவருக்கும் பலத்த விதிமுறைகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அது மட்டுமன்றி ஊரடங்கு காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. அப்போது மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடத்துவதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன.

இருந்தாலும் நீட்தேர்வு வெற்றிகரமாக நடந்துமுடிந்த அதன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதனையடுத்து மருத்துவ படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் இன்னும் 12 இடங்கள் உள்ள நிலையில், இன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. சென்னையில் நாளை பொதுப்பிரிவு மாணவர்களுக்கு மருத்துவ கலந்தாய்வு நடக்க உள்ளது.

Categories

Tech |