உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக அம்மாநில அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் பள்ளி ஆசிரியர்கள் அனைவருமே மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக பள்ளிக்கு வர வேண்டும். பள்ளியிலிருந்து மாணவர்கள் வீட்டிற்கு கிளம்பிய முப்பது நிமிடங்களுக்குப் பிறகு ஆசிரியர்கள் பள்ளியில் இருந்து கிளம்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கு அடுத்த நாள் வகுப்பில் என்ன பாடம் நடத்தப் போகிறீர்கள் என்பது தொடர்பான தகவல்களை முந்தைய நாளே ஆசிரியர்கள் தயாரிக்க வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்யும் விதமாகவும் பள்ளி மாணவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் உத்தரபிரதேச அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.