Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு….. தேசிய உதவித்தொகை: விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி…..!!!!

கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022-23 கல்வி ஆண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் மையங்கள், மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarship என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தகுதியானவர்கள் பள்ளிப்படிப்பு கல்வி உதவி தொகை திட்டத்திற்கு செப்டம்பர் 30ம் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையான கல்வி உதவித் தொகைக்கு அக்டோபர் 31 ஆம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 0422-2300404 மற்றும் இ-மெயில் முகவரி [email protected] வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |