Categories
மாநில செய்திகள்

“பள்ளி, கல்லூரிகளில் போதை மறுவாழ்வு மையம்”….. சென்னை காவல் ஆணையர் அதிரடி அறிவிப்பு….!!!!

பள்ளி, கல்லூரிகளில் போதை மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க “ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0” என்ற சிறப்பு நடவடிக்கையை தமிழக காவல்துறை மேற்கொண்டுள்ளது. அதில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே உள்ள கடைகளில் கஞ்சா, குட்கா போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்த பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இந்த குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து வந்துள்ளனர். இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று செய்தியாளர்களை சந்திக்கும் போது குற்றவாளிகளை பிடிக்கும் போதே போதையில் இருக்கின்றனர். போதைப்பொருள் பயன்பாடு குறித்த சர்வே ஒன்று எடுக்க உள்ளோம். கஞ்சா  மட்டுமல்லாமல் குட்கா, மாவா பயன்பாடுகளையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. மேலும், பள்ளி, கல்லூரிகளில் போதை மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

Categories

Tech |