Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரிகளில்….. “இப்படித்தான் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்”….. வெளியான வழிகாட்டு நெறிமுறை….!!!!

பள்ளி, கல்லூரிகளில் தேசியக்கொடி ஏற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

சுதந்திர தின விழா வருகிற 15-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு அனைத்து அரசு துறை அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடும் நிகழ்வு நடைபெற உள்ளது. அந்த வகையில் பள்ளி, கல்லூரிகளில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகம் மானியகுழு அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா அன்று தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு பிறகு தொடங்க வேண்டும். கொரோனா தொற்று சூழ்நிலையை பொறுத்து நேரடியாகவோ அல்லது ஆன்லைன் வாயிலாகவோ தேசிய கொடி ஏற்றும் நிகழ்வை ஏற்பாடு செய்யலாம். நேரடியாக நடக்கும் நிகழ்வுகளில் அனைத்து பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் பங்கேற்க வேண்டும்.

பெற்றோர்கள், பாதுகாவலர்கள் கலந்து கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும். தேசிய போர் நினைவிடம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் அதன் தொடர்பான தகவல்களை அன்றைய தினம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி, கல்லூரிகள் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |