திருவண்ணாமலை அருகே பெற்ற மகளை தந்தையே கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சேர்ந்த கன்னியப்பன் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவி உடல் நலமின்றி இருப்பதை அறிந்த பள்ளி நிர்வாகத்தினர் அவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர் .
அங்கு மருத்துவர்கள் அந்த மாணவியை பரிசோதித்துவிட்டு 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து மாணவியிடம் விசாரித்ததில் மாணவியின் தந்தை அவரிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்துள்ளது. இதை அடுத்து பள்ளி நிர்வாகம் அவரது தந்தையின் மீது புகார் அளித்தது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கன்னியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.